search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பால பணிகள்"

    • சாய்பாபா காலனி பகுதியில், ரூ.46.61 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த 9-ந் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது.
    • இவ்விரு பாலங்களையும் கட்டுவதற்கு, தலா 4 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை நகரின் வழியே பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. இவற்றில் திருச்சி ரோட்டில் சுங்கம் பகுதியிலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் ஆகிய இடங்களிலும் பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இதே ரோட்டில், பெரிய நாயக்கன்பாளையத்திலும், பொள்ளாச்சி ரோட்டில் உக்கடம் பகுதியிலும், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால், திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி, சத்தி ரோட்டில் சரவணம்பட்டி பகுதியிலும் பாலங்கள் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தது.

    திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் பகுதியில் 2.4 கி.மீ., நீளத்துக்கும், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி பகுதியில் 1.14 கி.மீ., தூரத்துக்கும், சரவணம்பட்டியில் காளப்பட்டி ரோடு சந்திப்பு-துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கி.மீ., நீளத்துக்குமாக 3 புதிய பாலங்கள் கட்ட, ரூ.280 கோடி நிதியையும், மத்திய அரசு ஒதுக்கிவிட்டது. மூன்று பாலங்களுக்கும் 2022 ஏப்ரலில் டெண்டரும் விடப்பட்டது.

    ஆனால், கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வந்ததால், இந்த 3 பாலங்களில் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

    திட்ட அறிக்கையில், அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் மட்டுமே முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் தடம் அமைவது உறுதியானது.

    இதனால், சரவணம்பட்டி தவிர, மற்ற 2 பாலங்களையும கட்ட மெட்ரோ நிறுவனம் தடையின்மைச் சான்று வழங்கியது.

    அதன்படி, மற்ற இரண்டு பாலங்களையும் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டுள்ளது. சிங்காநல்லூரில் ரூ.110.80 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த ஜூலை 24 அன்று டெண்டர் விடப்பட்டது. இது செப்டம்பர் 11-ல் இறுதி செய்யப்படவுள்ளது. சாய்பாபா காலனி பகுதியில், ரூ.46.61 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த 9-ந் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. இது வருகிற செப்டம்பர் 26-க்குள் இறுதி செய்யப்படும்.

    செப்டம்பர் இறுதிக்குள் இரண்டு டெண்டர்களும் இறுதி செய்யப்படும் பட்சத்தில், அக்டோபரில் பணிகள் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.

    இவ்விரு பாலங்களையும் கட்டுவதற்கு, தலா 4 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பாலங்களுக்குமே, ஒரு சதுர அடி கூட நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத காரணத்தால், பணிகளை முடிப்பதில் தடைகள் இருக்காது.

    சரவணம்பட்டியில் பாலம் கட்டுவது குறித்து, பின்பு விவாதித்துக் கொள்ளலாம் என்று, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சரவணம்பட்டியில் பாலம் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில், மெட்ரோ தடத்துக்கான தூண்களை அமைக்க, நான்கு மீட்டர் அளவுக்கு நிறுவனமே, நிலம் எடுத்துக் கொடுப்பதாகவும், அத்துடன் இணைந்து பாலம் கட்டலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

    • ரூ. 30 கோடி செலவில் நடைபெறும் கீழக்கரை ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் -திருப்புல்லாணி ரோடு சக்கரகோட்டை வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் நகருக்கு வந்து சென்றனர்.

    இந்த நிலையில் சேதுநகர் ரெயில்வே கேட் மூடும் போது ராமேசுவரம் ரோட்டில் பழைய பஸ் நிலையம் வரை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.30 கோடியில் சேதுநகர் ரெயில்வே கேட் அருகே புதியமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ல் தொடங்கியது.

    இந்த பாலம் ராமநாத புரத்தில் இருந்து சக்கர கோட்டை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கொரோனா பரவல், நிலம் கையகப்படுத்து வதில் தாமதத்தால் 4 ஆண்டுகளாக பாலப்பணி ஆமை வேகத்தில் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது ரெயில்வே கேட் அருகே மேம்பாலத்தில் கிரேன் மூலம் பெரிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் - ராமேசுவரம் மார்க்கத்தில் ஒரு வழிப் பாதையாக பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.ராமேசுவரம் மார்க்கத்தில் வரும் பஸ்கள் பட்டணம் காத்தான் டி-பிளாக், கேணிக்கரை ரோட்டில் செல்கின்றன. இதற்காக சேதுநகர் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே கேட்டை நிரந்த ரமாக மூடியுள்ளனர்.

    பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போர்க்கால அடிப்படை யில் பணிகளை துரிதமாக செய்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளிப்பாளையம் முதல் ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.
    • இந்நிலையில் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்கள், சிக்கலான பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் முதல் ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.

    இதற்காக பஸ் ஸ்டாப்பு களை திலகம் பெட்ரோல் பங்க் அருகிலும், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அதன் எதிர் பகுதியிலும் நிறுத்தி இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முறையான அறிவிப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்கள், சிக்கலான பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது

    மக்கள் தவித்து வரு கின்ற னர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறி வித்தது போல தற்போது மாற்றப்பட்டுள்ள பஸ் ஸ்டாப் இடத்தில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மேலும் பஸ்களை நடுரோட்டில் நிறுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்து உள்ளனர்.

    • ெரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • திருமங்கலம் நகராட்சியில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் -விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள வார்டுகள் 21, 21 26 மற்றும் 27 வார்டு களுக்கான பகுதி சபை கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் ஆதவன்அதியமான் முன்னிலை வகித்தார். இதில் 4 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டோல்கேட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருண், திருமங்கலத்தில் பெரிய பிரச்சினையாக ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பால பணிக்காக பூமிபூஜை போடப்பட்டது. அதன்பின் பணிகள் தொடங்கவில்லை. விதிமுறை மீறி கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கூறுகையில், ெரயில்வே மேம்பால பணிகள் குறித்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூர் டோல்கேட் பிரச்சினை தொடர்பாக நாங்கள் பதவிக்கு வந்தவுடன் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    தற்போது டோல்கேட் எதிர்ப்புக்குழுவினர் முதல்வரை சந்திக்க வேண்டும். எங்களிடம் வழங்கிய கடிதத்தினை முதல்வருக்கு அனுப்பி உள்ளோம். தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் விரைவில் முதல்வரை இது தொடர்பாக சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றனர்.

    கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, வினோத், ரவி, ராஜகுரு, முத்துகாமாட்சி, சாலிகாஉல்பத் ஜெய்லானி, ரம்ஜான்பேகம் ஜாகீர், பகுதி சபை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியநாயக்க ன்பாளையம் பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் பகுதியில் கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் சர்வீஸ் ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரிய நாயக்க ன்பாளையம் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உள்ள 15 செண்ட் பூமியை எடுக்க நெடுஞ்சாலை துறை அளவீடு செய்துள்ளது. பள்ளி வாசலை 800 குடும்பங்கள் தொழுகைக்காகவும் அடக்கம் செய்யவும் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூடலூர் நகராட்சி பகுதியில் இடஒதுக்கீடு செய்து தருமாறு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதன் பேரில் சிறப்பு நகரசபை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. நகரசபை தலைவர் அறிவரசு தலைமையில் நடந்த கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குப்பாளையம் பிரிவிற்கு தெற்கே மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இடத்தை ஒதுக்கீடு செய்து முஸ்லீம் மக்கள் அடக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகராட்சி துணைத்தலைவர் ரதிராஜேந்திரன் உட்பட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான ஆணை யை சுன்னத் ஜமாத் செயலர் அப்துல் ரகுமான், பொருளாளர் இப்ராஹீம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இது குறித்து தலைவர் அறிவரசு கூறுகையில் அப்பகுதியில் சுகாதாரம் மேம்படுத்தப்படும் நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்துக்கள், முஸ்லீம்களுக்கு அருகருகே மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

    ×